செவ்வாய், 5 செப்டம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 643

திருக்குறள் – சிறப்புரை : 643
கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல். --- ௬௪௩
கேட்பாரைத் தன்வயப்படுத்தும் ஆற்றலுடன் கேட்காதவரையும் (பிறர் வழியாக அறிந்தோர்) கேட்கத்தூண்டுவதாகவும் அமைவதே சொல்வன்மையாகும்.
“ உணர்ச்சிவாயில் உணர்வோர் வலித்தே.” –தொல்காப்பியம்.

சொல்லின் பொருளை உணர்தல்,  சொல்லைக் கேட்போர் அறிவினைப் பொறுத்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக