புதன், 20 செப்டம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 657

திருக்குறள் – சிறப்புரை : 657
பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை .----
பழி சூழ்ந்த செயல்களைச் செய்து ஈட்டிய செல்வத்தைக் காட்டிலும் நன்னெறியில் வழாது வாழும் சான்றோர் துய்க்கும் வறுமை மேலானது.
“ அல்லது செய்வார் அரும்பொருள் ஆக்கத்தை
நல்லது செய்வார் நயப்பவோ…” –பழமொழி.

அடாது செய்வார் ஈட்டிய பொருள் பெரிதாயினும் அப்பொருளை நல்லறம் செய்வோர் விரும்புவாரோ..? விரும்பமாட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக