செவ்வாய், 26 செப்டம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 662

திருக்குறள் – சிறப்புரை : 662
ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள். ---- ௬௬௨
செயலாற்றுங்கால்,  இடையூறு வாராமல் காத்துக் கொள்வதும் இடையூறு வந்தவிடத்து மனம் தளராமல் முயற்சி செய்தலும் ஆகிய இவ்விரு நெறிகளே வினைத்திட்பமாகும் என்பது ஆராய்ந்து அறிந்த சான்றோர் கொள்கையாகும்.
“ …… ….. …. …… தத்தம்
இனத்து அனையர் அல்லர் எறிகடல் தண்சேர்ப்ப
மனத்து அனையர் மக்கள் என்பர்.” --- நாலடியார்..

அலை மோதுகின்ற கடலின்  குளிர்ச்சியான கரை  உடையவனே..! மனிதர் என்று சொல்லப்படுகிறவர், தங்கள் தங்களுடைய இனத்தை ஒத்தவர் அல்லர்;  தத்தம் மனத்தை ஒத்தவர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக