வியாழன், 7 மே, 2020

தன்னேரிலாத தமிழ் -54


தன்னேரிலாத தமிழ் -54

சோறு யாரும் உண்ணாரோ சொல் யாரும் சொல்லாரோ
ஏறு யாரும் வையத்துள் ஏறாரோ தேறி
உரியது ஓர் ஞானம் கற்று உள்ளம் திருத்தி
அரிய துணிவதாம் மாண்பு.”---அறநெறிச்சாரம்.

சோறு உண்ணுதலும் செய்வதற்கு அரியன செய்வேன் என்று கூறுதலும் பல்வேறு  ஊர்திகளில் ஏறிச் செல்லுதலும் ஆகிய செயல்களை உலகத்தில் பலரும் செய்வர். ஆகவே தகுதி மிக்க அரிய செயல்களைச் செய்து, வீடு பேற்றினை அடையக் கருதுவதே ஒருவனுக்குப் பெருமை தருவதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக