வெள்ளி, 29 மே, 2020

தன்னேரிலாத தமிழ் - 76


தன்னேரிலாத தமிழ் - 76

பகை சேரும் எண்ணான்கு பல் கொண்ட நல்நா
வகைசேர் சுவை அருந்துமா போல் தொகை சேர்
பகைவரிடம் மெய்யன்பு பாவித்து அவரால்
சுகம் உறுதல் நல்லோர் தொழில்.” ---நீதிவெண்பா.

தன்னைச் சில நேரங்களில் கடித்துத் துன்பம் தரும் பற்களைக் கொண்டு சுவைபெறும் நாக்கைப் போல், தங்கள் பகைவரிடத்தும் உண்மையான அன்பிருப்பதை வெளிப்படுத்தி, அவர்களால் வேண்டிய பயன்களை அடைதல் பண்புடையோரின் செயலாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக