வியாழன், 28 மே, 2020

தன்னேரிலாத தமிழ் - 75


தன்னேரிலாத தமிழ் - 75

கருமம் சிதையாமே கல்வி கெடாமே
 தருமமும் தாழ்வு படாமே பெரிதும் தம்
இல்நலமும் குன்றாமே ஏரிளங் கொம்பு அன்னார்
நல்நலம் துய்த்தல் நலம். ---- நீதிநெறிவிளக்கம்.

தாம் மேற்கொண்ட செயல்கள் இடையில் சிதைந்து போகாமலும் மேன்மேலும் நுணுகிக் கற்க வேண்டிய கல்வி கெட்டுப்போகாமலும் செய்து முடிக்க வேண்டிய அறச் செயல்களுக்குக் குறைவு வராமலும் ஒழுகி,  தம்முடைய இல்லற இன்பமும் குறைவுபடாமல் அழகுமிக்க இளம் கொம்பு போலும் மனைவியுடன் இன்பத்தை நுகர்தல் எல்லார்க்கும் நன்றாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக