செவ்வாய், 26 மே, 2020

தன்னேரிலாத தமிழ் - 73


தன்னேரிலாத தமிழ் - 73

பெண் விழைவார்க்கு இல்லை பெருந் தூய்மை பேணாது ஊன்
உண் விழைவார்க்கு இல்லை உயிர் ஓம்பல் எப்பொழுதும்
மண் விழைவார்க்கு இல்லை மறம் இன்மை மாணாது
தம் விழைவார்க்கு இல்லை தவம்.” ---அறநெறிச்சாரம்.

உரிமை இல்லாத பிற மகளிரை விரும்புவோரிடத்து மன மாசின்மையும் ;கருணை இல்லாமல் உயிர்க் கொலை புரிந்து புலால் உண்போரிடத்து உயிர்களைக் காக்கும் இயல்பும் ; எப்பொழுதும் மண்ணாசை பிடித்து அலையும் வேந்தர்களிடத்துப் போர்க்குணம் இன்மையும்; பெருமை தராத செயல்களைச் செய்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள விரும்புவோரிடத்துத் தவ ஒழுக்கமும் இல்லை என்பதாம். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக