வியாழன், 14 மே, 2020

தன்னேரிலாத தமிழ் -61


தன்னேரிலாத தமிழ் -61

அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வார் உறவல்லர்-அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு.” ---வாக்குண்டாம்.

நீர் வற்றிய குளத்தில் இருந்து நீங்கிச் செல்கின்ற பறவைகள் போல , வறுமையுற்ற காலத்தில் நம்மைவிட்டு விலகிச் செல்பவர்கள் உறவினர்கள் அல்லர்; நீரற்ற குளத்தில் உள்ள அல்லி, கொட்டி, நெய்தல் ஆகிய  பயிர்கள் போல விலகாமல் சேர்ந்திருந்து இன்ப துன்பங்களில் பங்குகொள்பவர்களே உறவினர் ஆவர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக