ஞாயிறு, 17 மே, 2020

தன்னேரிலாத தமிழ் -64


தன்னேரிலாத தமிழ் -64

வெம்மை உடையது அடிசில் விழுப் பொருட்கள்
செம்மை உடையதாம் சேவகம் தம்மைப்
பிறர்கருதி வாழ்வதாம் வாழ்க்கை இம்மூன்றும்
உறவருவது ஓர்வதாம் ஓர்ப்பு. –அறநெறிச்சாரம்.

வெம்மையாக இருப்பதே உண்பதற்கு ஏற்ற உணவு ; குறைவற்ற வருவாயோடு நேர்மை தவறாமல் இருப்பதே பதவி ; தம்மைப் பிறர் எப்பொழுதும் நினைவில் கொள்ளும்படி ஈகைக் குணத்துடன் வாழ்வதே வாழ்க்கை ஆகிய இம்மூன்றையும் பெற வைப்பதே ஆராய்ந்து தெளிவதாகிய வினை முடிக்கும் துணிவாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக