சனி, 30 மே, 2020

தன்னேரிலாத தமிழ் - 77


தன்னேரிலாத தமிழ் - 77

தன்னையும் தன்னில் பொருளையும் பட்டாங்கில்
பன்னி அறம் உரைக்க வல்லாரை மன்னிய
சிட்டர் என்ன சிட்டர் என்று ஏத்துவர் அல்லாரைச்
சிட்டர் என்று ஏத்தல் சிதைவு.”--அறநெறிச்சாரம்.

தன்னைப்பற்றியும் தன்னால் அறியத்தகும் பொருள்களைப் பற்றியும் உண்மையாகக் கூறி, சீரிய அறம் உரைக்க வல்லாரை, ‘நிலைபெற்ற கல்வியறிவு நிரம்பிய சான்றோர், மிக உயர்ந்த பெரியோர்என்று உலகத்தார் பாராட்டுவர். அத்தகைமை இல்லாதவர்களைச் சான்றோர் என்று போற்றுவது கேடு பயப்பதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக