திங்கள், 18 மே, 2020

தன்னேரிலாத தமிழ் -65


தன்னேரிலாத தமிழ் -65

தண்ணீர் நிலநலத்தால் தக்கோர் குணம் கொடையால்
கண்ணீர்மை மாறாக் கருணையால்பெண்ணீர்மை
கற்பழியா ஆற்றலால் கடல் சூழ்ந்த வையகத்துள்
அற்புதமாம் என்றே அறி.”நல்வழி.

தண்ணீரின் சுவை அது தேங்கும் நிலத்தாலும்,  கொடைப் பண்பினால் வறியோரைக் காக்கும்  பண்பினால் நல்லவர்களையும், அருள் தன்மையினால்  கண்ணின் தன்மையினையும் , கற்பு நெறியால் பெண்களின் சிறப்பையும் அறியலாம். இவை அனைத்தும் உலகில் உயர்வாகப் போற்றத்தக்க செயல்களாகும்.

1 கருத்து: