ஞாயிறு, 18 ஜூலை, 2021

தன்னேரிலாத தமிழ் –293

 

தன்னேரிலாத தமிழ் –293

மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்

வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. குறள். 51.

 

பெண்ணின் பெருமையே பெருமைஅன்பின்

தன்மையும் தாய்மையும் தழைத்திடும்அருமை (பெண்ணின்)

 

உண்ணதமாகிய கனவே நினைவாக

உருவாக்கியே வாழ வழிகாட்டிடும் தெய்வம் (பெண்ணின்)

 

அன்பும் குணமும் உயர்ந்த அறிவும் இருக்கும்போது

அழகில்லை என்றால் அதனால் குறையேது?

பண்பும் நற்குடிப் பிறப்பும் மிகநிறைந்து

பதிவாழ்வையே தனது நிதியாகக் கருதும்உத்தமப் (பெண்ணின்)

----கவிஞர் கு.சா. கிருஷ்ணமூர்த்தி, படம்: பதியே தெய்வம், 1956.

2 கருத்துகள்: