வெள்ளி, 23 ஜூலை, 2021

தன்னேரிலாத தமிழ் –297.

 

தன்னேரிலாத தமிழ் –297.

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது,-குறள். 45.

 

பெண்: இன்று நமதுள்ளமே-பொங்கும்

புது வெள்ளமே

இல்லற ஓடமிதே-இனி இன்பம்

ஏந்திச் செல்லுமே.

ஆண்: மங்கையர் குலமணியே

மஞ்சள் முகந்தனிலே

மகிழ்ச்சிகள் துள்ளுமே

வந்தென்னை அள்ளுமே.

பெண்: நேற்று நம்மைக் கண்ட நிலா

நெஞ்சுருகிச் சென்ற நிலா

வாழ்த்துகள் சொல்லுமே

மனந்தன்னைக் கிள்ளுமே

ஆண்: வள்ளுவன் வழியினிலே –இனி

வாழ்க்கை ரதம் செல்லுமே

பெண்: கண்களில் ஊறும் நீரும் –இனி

நம் நிலை காண நாணும் – சுகம்

கவிதை பாடிவரும்.

---கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், படம்: தங்கப்பதுமை,1959.

1 கருத்து:

  1. அன்பையும் அறனையும் உள்ளத்தில் ஏந்தியொழுகும் ஒரு இணையின் இருகுரலிசை ! பட்டுக்கோட்டையாரின் கருத்தான வரிகளின் இனிமையில் மனதைப் பறிகொடுத்த எத்துணையோ மாந்தர்களில் என் பெயரும் இடம் பெற்றிருப்பது தமிழுக்கே உரிய இனிமையாலன்றோ !

    பதிலளிநீக்கு