திங்கள், 12 ஜூலை, 2021

தன்னேரிலாத தமிழ் –288,

 

தன்னேரிலாத தமிழ் –288,

சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்

வறுமை தருவதுஒன்று இல்.-குறள்.-934.

சூதாடி மாந்தர்களின்

சுகவாழ்வும் ஒரு நாளில்

பாதாளம் போகுமெனல்

பாரறிந்த உண்மையன்றோ?

 

சொல்லமுடியாத துன்பக் கதை

சூதாடி மனிதரின் சோகக் கதை

நல்ல மனிதரும் வஞ்சகராகி

கள்ள வேலைகள் செய்த கதை-சிலர்

கொள்ளை லாபத்தில் கொண்ட மோகத்தால்

உள்ளதும் இழந்து உருக்குலைந்த கதை (சொல்ல)

 

அந்த நாளிலே பஞ்ச பாண்டவர்

அரசு உரிமை இழந்ததும்

அழகு பாஞ்சாலி அம்மையாருடன்

அனைவரும் காட்டில் அலைந்ததும்

அன்பு மேலிடும் நளன் தமயந்தி

அல்லல் சுமந்து வருந்தியதும்

அரிய காதலைப் பிரிய நேர்ந்ததும்

ஆதாரம் இழந்ததும் சூதாட்டத்தாலே.”

---கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், படம்: உலகம் சிரிக்கிறது,  1959.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக