செவ்வாய், 13 ஜூலை, 2021

தன்னேரிலாத தமிழ் –289.

 

 தன்னேரிலாத தமிழ் –289.

இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை

எல்லாரும் செய்வர் சிறப்பு. குறள். 752.

பொருளே இல்லார்க்குத் தொல்லைய?

புது வாழ்வே இல்லையா?

இருள் நீங்கும் மார்க்கம் இல்லையா

இறைவா நீ சொல்லையா –(பொருளே)

பசியாலே வாடும் பாவி முகத்தைப்

பார்ப்போர் இல்லையா?

எமைக் காப்போர் இல்லையா?

ஏழை எம்மை ஆதரிக்கும் இரக்கம் இல்லையா?

இருள் நீங்கும் மார்க்கம் இல்லையா?

இறைவா நீ சொல்லையா..!(பொருளே)

 

வறுமைப் பேயை விரட்ட நாட்டில்

வழியே இல்லையாஅதற்கு

அழிவே இல்லையா?

 

பொருளில்லாதார் இல்லையென்னும்உலகில்

பொருளில்லாதார் இல்லையென்னும்

திரு நாளே இல்லையா?

இருள் நீங்கும் மார்க்கம் இல்லையா?

இறைவா நீ சொல்லையா..! (பொருளே)

---கவிஞர் கே.பி. காமாட்சி, படம்: பராசக்தி, 1952.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக