வெள்ளி, 15 செப்டம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 652

திருக்குறள் – சிறப்புரை : 652
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை. ---- ௬௫
தனக்குப் புகழும் பிறருக்கு நன்மையும் தராத எந்த ஒரு செயலையும் செய்யாது நீக்கி விடுதல் வேண்டும்.
“ வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
 நன்றி பயவா வினை. –குறள். 439.

ஒருவன், எக்காலத்தும் தன்னைத்தானே வியந்து போற்றிக்கொள்ளக் கூடாது ; நன்மை தராத செயலையும் விரும்பக்கூடாது

1 கருத்து: