திங்கள், 3 டிசம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1065


திருக்குறள் -சிறப்புரை :1065

தெண்ணீர் அடுபுற்கை யாயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்கினியது இல்.----- ௧0௬

  தன் வீட்டு அடுமனையில் ஆக்கப்பட்ட தெளிந்த நீர் போலும்   கூழாயினும் தன்னுடைய உழைப்பினால் கிடைத்ததை உண்பதைவிட  இனிமையானது வேறு ஒன்றும் இல்லை.

“விருப்பு இல்லார் இல்லத்து வேறு இருந்து உண்ணும்
வெருக்குக்கண் வெம் கருனை வேம்பாம் – விருப்புடைத்
தன் போல்வார் இல்லுள் தயங்கு நீர் தண்புற்கை
என்போடு இயைந்த அமிழ்து,” ---நாலடியார்.

தன்மேல் அன்பில்லாதவர்களுடைய வீட்டில் வேறாயிருந்து பூனைக் கண்ணைப்போன்ற பொரிக்கறி உணவு வேம்பைப்போல் கசப்பாம் ; விருப்பமுள்ள தன்னோடு ஒத்தவருடைய வீட்டில் உண்ணப்படும் தெளிந்த நீரிலேயுள்ள புல்லரிசிக் கூழானது உடம்பிற்குப் பொருந்திய அமிழ்தமாகும்.

1 கருத்து:

  1. வணக்கம் நண்பர்களே!, தங்கள் அருமையான பதிவுகளை TamilBM (https://bookmarking.tamilbm.com/register/) திரட்டியிலும் இணையுங்கள்.

    பதிலளிநீக்கு