ஞாயிறு, 6 ஜனவரி, 2019

திருக்குறள் -சிறப்புரை :1098


திருக்குறள் -சிறப்புரை :1098

அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும். ---- 0௯௮

( உண்டு ஆண்டு ஓர்; அசை இயற்கு )

நான் அவள் அருள்வேண்டி இரந்து பார்த்தபோது  அவளும் அன்பும் இரக்கமும் கொண்டு, மெல்ல நகைத்து நின்றாள் ; அசையும் மயில் போன்ற சாயலையுடைய இப்பெண்ணிற்கு அந்த நகைப்பு,  உடன்படும் நல்ல குறிப்பு என்பதை உணர்ந்து கொண்டேன்.

நயனுன் நண்பும் நாணும் நன்கு உடைமையும்
பயனும் பண்பும் பாடறிந்து ஒழுகலும்
நும்மினும் அறிகுவென்…..” ----- நற்றிணை.

குவளை மலரின் பிணையலைப் போன்றது, செவ்வரி பரந்து மதர்த்து விளங்கும் இவளுடைய கண்கள் ; அக்கண்களை யான் காணும் முன்பாக என்னிடம்  …; யாருடனும் நெருங்கிப் பழகும் உறவும் சுற்றம் தழுவலும் நட்பும் நாணம் நன்குடைமையும் பிறர்க்கு உதவும் பயனறிதலும் நன்னெறிக்கண் படரும் பண்பும் உலக நடையறிந்து ஒழுகும் பாங்கும் நும்மைவிடச் சிறந்திருந்தன,’இப்போது இவள் கண்களைக் கண்ட பின்னர் அவையாவும் எம்மிடம் இல்லையாயின. – இனி எல்லாப் பண்புகளும் இவள் பொருட்டாயின  என்றனன்.என்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக