திங்கள், 7 ஜனவரி, 2019

திருக்குறள் -சிறப்புரை :1099


திருக்குறள் -சிறப்புரை :1099

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள.----- 0௯௯

முன்பின் அறியாதவர்கள் போலப் பருவ ஈர்ப்பினால் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வதும் காதலர் கண்ணே உள்ளதொரு காதல் குறிப்பேயாம்.

காமத் திணையில் கண்ணின்று வரூஉம்
நாணும் மடனும் பெண்மைய ஆதலின்
குறிப்பினும் இடத்தினும் அல்லது வேட்கை
நெறிப்பட வாரா அவள் வயினான. ----தொல்காப்பியம்.

களவொழுக்கத்தில் நாணும் மடனும் அவள் கண்ணின்வழி வெளிப்படுதலால், குறிப்பாலும் சூழ்நிலையாலும் உணர்த்துவாளே அன்றி நேரடியாகத் தன் விருப்பத்தைத் தெரிவித்தல் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக