திங்கள், 21 ஜனவரி, 2019

திருக்குறள் -சிறப்புரை :1113


திருக்குறள் -சிறப்புரை :1113

முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு. --- ௧௧௧

இவளுக்குப் பசுமையான மூங்கில் போலும் தோள்கள் ; இளந்தளிர் போலும் மேனி ; முத்துக்கள் போன்ற பற்கள் ; இயல்பாக அமைந்த நறுமணம் ;  வேல் போலும் மையுண்ட கண்கள்.

நுணங்கு அமைத்திரள் என நுண் இழை அணை என
முழங்கு நீர்ப் புணை என அமைந்த நின் தடமென்தோள்
வணங்கு இறை வால் எயிற்று அம் நல்லாய் நிற் கண்டார்க்கு
அணங்காகும் என்பதை அறிதியோ அறியாயோ.” –கலித்தொகை.

வளைந்த முன் கையினையும் வெள்ளிய பற்களையும் உடைய அழகிய நல்லாளே, நிறத்தாலும் திரட்சியாலும் நுண்மையை உடைய மூங்கில் என, மென்மையால் நுண்ணிய துகிலினை உடைய அணை என, காமக் கடலை நீந்துவதற்கு வேழக் கோலால் செய்த தெப்பம் என அமைந்து விளங்குகின்றன மெல்லிய தோள்கள் ; இத்தோள்கள் கண்டார்க்கு வருத்தம் செய்வன என்பதை நீதான் அறிவையோஅறியாயோ..?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக