ஞாயிறு, 27 ஜனவரி, 2019

திருக்குறள் -சிறப்புரை :1119


திருக்குறள் -சிறப்புரை :1119

மலரன்ன  கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி. ------ ௧௧௧

மதியே..! அழகிய மலர்போலும் கண்களையுடைய என் காதலியின் முகத்தை ஒத்திருப்பாயானால், நான் மட்டும் காணுமாறு தோன்றுவாயாக ; பலரும் காணுமாறு தோன்றாதிருப்பாயாக…!

வாளரம் பொருத கோண் ஏர் எல்வளை
அகன் தொடி செறித்த முன்கை ஒண்ணுதல்
திதலை அல்குல் குறுமகள்
குவளை உண்கண் மகிழ் மடநோக்கே.” ---நற்றிணை

கைவல் வினைஞன் வாள் அரத்தால் அராவிய வளைந்த அழகிய ஒளியை உடைய வளை அணிந்த முன்கையினையும் ஒளி பொருந்திய நெற்றியையும் தித்தி படர்ந்த அல்குலையும்  இளமை அழகுடைய எமது காதலியின் குவளை மலர் போன்ற மையுண்ட கண்களின் இளம் பார்வை, இவள்பால்  எம்மை ஈர்க்கிறதே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக