செவ்வாய், 22 ஜனவரி, 2019

திருக்குறள் -சிறப்புரை :1114


திருக்குறள் -சிறப்புரை :1114

காணிற் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண்ஒவ்வேம் என்று. ---- ௧௧௧

குவளை மலர்களுக்குப் பார்க்கும் திறன் இருக்குமேயானால், சிறந்த அணிகலன் அணிந்த இவளின் கண்களுக்குத் தாம் இணையாக மாட்டோமென்று வெட்கித் தலைகுனிந்து நிலத்தை நோக்கும்

சுரஞ்செல விரும்பின ராயின் இன்நகை
முருந்தெனத் திரண்ட முள் எயிற்றுத் துவர்வாய்க்
குவளை நாள்மலர் புரையும் உண்கண் இம்
மதியேர் வாள்நுதல் புலம்பப்
பதி பெயர்ந்து உறைதல் ஒல்லுமோ நுமக்கே.” ----அகநானூறு.

இனிய நகையினையும் மயிலிறகின் அடியெனத் திரண்ட முள் போலும் கூரிய பற்களையும் சிவந்த வாயினையும் , குவளையும் புதிய மலரையும் ஒக்கும் மையுண்ட கண்ணினையும் உடைய,  இந்த மதியினை ஒத்த ஒளிபொருந்திய நெற்றியினையுடையாள் வருந்த , இவ்விடத்தை நீங்கிப்போய்த் தங்குதல் உமக்குப் பொருந்துவதாகுமோ..?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக