வியாழன், 17 ஜனவரி, 2019

திருக்குறள் -சிறப்புரை :1109


திருக்குறள் -சிறப்புரை :1109

ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன். ----- ௧௧0.

காதலர் தம்முள் ஊடிக்கொள்ளலும் அதனை நீளவிடாது நீக்கிக்கொள்ளலும் பின் புணர்ந்து மகிழ்தலும் இவையே  காம விருப்பை முற்றும் எய்தியவர்கள் பெற்ற பயன்களாகும்.

முயங்காக்கால் பாயும் பசலை மற்று ஊடி
உயங்காக்கால் உப்பின்றாம் காமம்வயங்கு ஓதம்
நில்லாத் திரை அலைக்கும் நீள்கழித் தண்சேர்ப்ப
புல்லாப் புலப்பது ஓர் ஆறு. “ ---நாலடியார்.

விளங்குகின்ற கடலானது ஓயாமல் அலைகளால் மோதுகின்ற நீண்டகழிகளின் குளிர்ச்சியான கரையை உடைய அரசனே..! தலைவியைப் புணராது போனால் அவள் உடம்பில் பசலை நோய் பரவும் ; ஊடல் கொள்ளாதபோது காமம் இன்பமளிக்காமல் போகும் ; புணர்ந்தும் ஊடல்கொண்டும் மகிழ்வது புணர்ச்சிக்கு ஓர் நன்னெறியாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக