சனி, 26 ஜனவரி, 2019

திருக்குறள் -சிறப்புரை :1118


 திருக்குறள் -சிறப்புரை :1118

மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி. ----- ௧௧௧

நிலவே நீ வாழ்வாயாக…! மாதர் முகம்போல் நீயும்  ஒளிவிட்டு மகிழ்ச்சியைத் தருவாயானால், நீயும் என்னால் காதலிக்கப்படுவாய்..!

அணிமுகம் மதி ஏய்ப்ப அம்மதியை நனி ஏய்க்கும்
மணிமுகம் மாமழை நின்பின் ஒப்ப பின்னின் கண்
விரிநுண் நூல் சுற்றிய ஈரிதழ் அலரி
அரவுக்கண் அணி உறழ் ஆரல் மீந்தகை ஒப்ப
அரும்படர் கண்டாரைச் செய்து ஆங்கு இயலும்
விரிந்து ஒளி கூந்தலாய்…… “ -----கலித்தொகை.

நினது அழகிய முகம் மதியை ஒத்துள்ளது; மணிகள் விளங்கும் நின் பின்னின கூந்தல், அம்முகத்துக்கு ஒப்பாகிய மதியை மிகவும் பொருந்தும் கருமையாகிய மழையை ஒத்திருக்க ;  கூந்தலிடத்தே நீ சூடியிருக்கும் பூவோ. நுண்ணிய நூலால் கட்டப்பட்டுத் தேனால் ஈரமான இதழைக் கொண்டிருக்க ; கரும் பாம்பிடத்தே கிடந்து அதன் கரிய நிறத்தோடு மாறுபடுகின்ற ஆரல் மீனினதுஅழகை ஒப்ப,  பின்னிய கூந்தலிலே கட்டிய பூ திகழ ;  கண்டவர்க்கு வருத்தத்தைச் செய்து போகின்ற பரந்து, தழைத்த கூந்தலை உடையாய்…!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக