திங்கள், 25 பிப்ரவரி, 2019

திருக்குறள் -சிறப்புரை :1146


திருக்குறள் -சிறப்புரை :1146

கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று.----௧௧௪ ௬

தலைவனைக்கண்டு மகிழ்ந்தது ஒருநாள்தான்;  அதனால் எழுந்த அலரோ, திங்களைப் பாம்புகொண்டதுபோல ஊரெங்கும் பரவிப் பலரும் அறிவதாயிற்று.

நெஞ்சே நிறையொல்லாதே யவரே
அன்பின்மையின் அருள் பொருள் என்னார்
வன்கண் கொண்டு வலித்து வல்லுநரே
அரவுநுங்கு மதியினுக்கு இவணோர் போலக்
களையாராயினும் கண்ணினிது படீஇயர்
அஞ்சல் என்மரும் இல்லை……” –குறுந்தொகை.

என் நெஞ்சம் நினைவை நிறுத்தலைச் செய்ய இயலாது, தலைவன் என்பால் அன்பின்மை காரணமாக அருளைப் பொருள் என்று கருதாராயினர்,வன்மையால் என்னை வற்புறுத்தி, அவ்வற்புறுத்தலில் வன்மையைப்பெற்றோர் பாம்பினால் உண்ணப்படும் திங்கள் திறத்தில் இவ்வுலகத்தில் உள்ளோர் செயல் போல, எனது துன்பத்தினை நீக்காரானாலும் இனிமையாகக் காணப்படுகின்றனர் ; அஞ்சற்க என்று கூறி நம்மைத் தேற்றுவாரும் இங்கே இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக