வியாழன், 28 பிப்ரவரி, 2019

திருக்குறள் -சிறப்புரை :1149


திருக்குறள் -சிறப்புரை :1149

அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்
பலர்நாண நீத்தக் கடை. ---- ௧௧௪௯

களவில் தழுவி மகிழ்ந்த காதலர், நின்னைப்பிரியேன் அஞ்சாதே என்று உறுதி அளித்தார் ; பலரும் நாணுமாறு அவர் பிரிந்துசென்றார்.  அதனால் அலர் தூற்றும் அயலாரைக்கண்டு நாணாமல் இருத்தல் கூடுமோ..?

பயமழை தலைஇய பாடுசால் விறல் வெற்ப
மறையினின் மணந்து ஆங்கே மருவு அறத்துறந்த பின்
இறைவளை நெகிழ்பு ஓட ஏற்பவும் ஒல்லும்மன்
அயல் அலர் தூற்றலின் ஆய்நலன் இழந்த கண்
கயல் உமிழ் நீர் போலக் கண்பனி கலுழாக்கால்.” ---கலித்தொகை.

அயலில் உள்ளார் அலர் தூற்றலின் இவள் கண்கள் தேர்ந்த தம் நலத்தை இழந்தன ; அவ்வளவில் நில்லாதே கண்கள் மீன்கள் நீரினை உண்டு உமிழுமாறுபோல நீர் உமிழ்ந்தன ; நீர் விழாத காலத்துக்கூடி மருவுதல் அறும்படி நீ பிரிந்தனை ; இதனால் முன்கையிற் கிடந்த வளைகள் நெகிழ்ந்து கழன்றன ; அதனால் பெற்றதென் ? அக்கண்கள்  அதற்கு ஒப்பவில்லையே…!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக