வியாழன், 5 மார்ச், 2020

தன்னேரிலாத தமிழ்-5


தன்னேரிலாத தமிழ்-5
இந்தியப் புவியியல் வரலாற்றில் இமயமலை தோன்றுவதற்கு முன்பே தோன்றியது மேற்கு மலைத் தொடர். உலகில் வேறெங்கும் காணக்கிடைக்காத அரிய வகை மூலிகைகள், அரிய உயிரினங்கள் ஆகியவற்றின்  வழிடமாகத்திகழ்கிறது இம்மலைத் தொடர், மனித இன வரலாற்றில் தொல்பழங் குடியினர் கால்பதித்த இடமாகக் கருதப்படுகிறது. குறிப்பாகத் தொல்தமிழ்க்குடியினர் தோற்றம் பெற்ற இடமாகவும் இயற்கையோடியைந்த வாழ்க்கையை மேற்கொண்டிருந்த இடமாகவும்  இக்குடியினரின் அக, புற வாழ்க்கையை ஆராய்ந்தறிந்த, பழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் ஆய்வுக் களமாகவும் திகழ்ந்தது மேற்குமலைத் தொடர்.

எழுத்தும் சொல்லும் உணரப் பொருளதிகாரம் கண்ட தொல்காப்பியரின் அறிவின் செறிவை, ஆராய்ச்சித் திறனை, அறிவியல் நோக்கினை உய்த்துணரவும் இயலுமோ..?

நச்சினார்க்கினியர் நல்லுரையில், பொருளதிகாரத்தின் பொருள் இன்னதென்பதை..”அறம், பொருள், இன்பமும் அவற்றது நிலையின்மையும் அவற்றினீங்கிய வீடு பேறுமாம், பொருளெனப் பொதுப்படக் கூறவே, அவற்றின் பகுதியாகிய முதல், கரு, உரியும் காட்சிப் பொருளும்  கருத்துப் பொருளும் அவற்றின் பகுதியாகிய ஐம்பெரும்பூதமும் அவற்றின் பகுதியாகிய இயங்கு திணையும் நிலைத் திணையும் பிறவும் பொருளாம். இப்பொருளை எட்டு வகையான் ஆராய்ந்தாரென்ப, அவை அகத்திணை, புறத்திணை என இரண்டு திணை வகுத்து, அதன்கட் கைக்கிளை முதற் பெருந்திணை யிறுவா வேழும் வெட்சி முதற் பாடாண்டிணை யிறுவாய் ஏழுமாகப் பதினான்கு பால் வகுத்து, ஆசிரியம், வஞ்சி, வெண்பா, கலி, பரிபாடல், மருட்பா வென அறுவகைச் செய்யுள் வகுத்து, முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தலென நால்வகை நிலம் இயற்றி, சிறுபொழுதாறும் பெரும்பொழுதாறுமாகப் பன்னிரண்டு காலம் வகுத்து, அகத்திணை வழுவேழும் புறத்திணை வழுவேழுமெனப் பதினான்கு வழுவமைத்து, வழக்கிடஞ் செய்யுளிடமென இரண்டு இட்த்தான் ஆராய்ந்தாராகலின் எட்டிறந்த பல்வகையான் ஆராய்ந்தாரென்போர் முதல், கரு, உரியும் திணைதொறுமரீஇய  பெயரும் திணை நிலைப் பெயரும் இருவகைக் கைகோளும் பன்னிருவகைக் கூற்றும் பத்துவகைக் கேட்போரும் எட்டுவகை மெய்ப்பாடும் நால்வகை உவமும் ஐவகை மரபும் என்பர்.”

மேற்சுட்டிய உரைவழி..... தொடரும்..!

1 கருத்து: