வியாழன், 3 டிசம்பர், 2015

பரிபாடல் – அரிய செய்தி - 14

பரிபாடல் – அரிய செய்தி - 14
களவும் கற்பும்
நான் மறை விரித்து நல் இசை விளக்கும்
வாய்மொழிப் புலவீர் கேண்மின் சிறந்தது
காதற் காமம் காமத்துச் சிறந்தது
விருப்போர் ஒத்து மெய்யுறு புணர்ச்சி
புலத்தலின் சிறந்தது கற்பே…
குன்றம்பூதனார். பரிபா.9 : 12 – 16
வடமொழியில் அமைந்த நான்கு வேதங்களையும் விரிவாகப் பாடி அவற்றின் பொருளை விளக்குகின்ற வாய்மொழியாகிய வேதத்தில் வல்ல புலவர்களே ! நாங்கள் சொல்கின்ற சிறந்த பொருளைக் கேட்பீராக ! காம ஒழுக்கத்தில் சிறப்புடையது காதலை (களவு) உடைய காமமேயாகும். காதலை உடைய காமம் என்பது முன்னர் உடம்பினால் எந்த உறவும் இல்லாத இருவர் தம்முள் எழுந்த அன்பு ஒன்றினாலேயே உள்ளம் ஒத்து ஊழ் கூட்டுவிக்கத் தாமே தம்முள் கண்டு காதல் கொண்டு புணர்தலாகிய மெய்யுறு புணர்ச்சியாகும். கற்பொழுக்கம் ஊடுதலால் சிறப்புடையதாகும்.
(காமங்களுள் சிறந்தது காதல் காமம் – காதல் இல்லாத காமமாவன கைக்கிளையும் பெருந்திணையும் பொருட் பெண்டிர் பொய்ம்மை முயக்கமும் முதலியன என்க – இவற்றைக் காமக் காமம் என்ப.) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக