வெள்ளி, 25 டிசம்பர், 2015

பரிபாடல் – அரிய செய்தி - 39

பரிபாடல் – அரிய செய்தி - 39
திரு நயத் தக்க வயல்
ஒருசார் சாறுகொள் ஓதத்து இசையொடு மாறுற்று
உழவின் ஓதை பயின்று அறிவு இழந்து
திரிநரும் ஆர்த்து நடுநரும் ஈண்டித்
திரு நயத் தக்க வயல்.
                       ……………. பரிபா. திரட்டு. 1 : 14 - 17
எம்பெருமானே ! நீ எழுந்தருளிய  இருந்தையூரின் மற்றொரு பக்கத்தில் மருத நிலத்தில் உள்ள ஆலைகளில் கரும்பின் சாற்றினைப் பிழிந்து எடுப்பதால் உண்டாகும் இனிய இசையுடன் கூடிய ஆரவாரத்தோடு மாறுபட்டு – உழவர்கள் உழும்போது பாடும் ஏர்மங்கலப் பாடல்களைப் பாடி ஆரவாரத்தை எழுப்பினர் – சிலர் கள் உண்டதால்  அறிவு மயங்கி எங்கும் திரிந்தனர் – உழத்தியர்  குரவை பாடி நாற்று நடுவர் –திருமகளும் விரும்பி வீற்றிருக்கும் தகுதி உடைய வயல்கள் உள்ளன.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக