ஞாயிறு, 20 டிசம்பர், 2015

பரிபாடல் – அரிய செய்தி - 34

பரிபாடல் – அரிய செய்தி - 34
தொல் தமிழர் வானியல் அறிவு
என்றூழ் உறவரும் இரு சுடர் நேமி
ஒன்றிய சுடர் நிலை உள்படுவோரும்
நப்பண்ணனார் பரிபா. 19 : 46 – 47
திருப்பரங்குன்றத்துத் தெளிந்த ஓவியம் வரைந்து நிற்றலையுடைய மாடத்தின்கண் சென்றாராக -  சிலர் .நாண்மீன்களையும் தாரகைகளையும் உடைய சுடர்ச் சக்கரத்தைக் கண்டு – ஞாயிறு முதலாக வரும் கோள்களினது நிலைமைய விளக்கி – ஆண்டுத் தீட்டப்பட்ட ஓவியத்தைக் கண்டு உணர்ந்து கொள்வர். ( இவ்வாறு ஞாயிறு முதலாகப் பொருந்த இயங்கும் – பண்டைக் காலத்துத் தமிழ்ச் சான்றோர் வானின்கண் உள்ள நாள் கோள் முதலியவற்றை ஆராய்ந்து – அவற்றைப் பொது இடங்களிலே ஓவியமாகவும் வரைந்து – மாந்தர்க்கு அறிவுறுத்தி வந்தமை உணரப்படும்.மேலும் ஓவியங்கள் வாயிலாய் மக்களுக்கு இதிகாச முதலியவற்றையும் உணர்த்தியமை அறிக.) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக