செவ்வாய், 29 டிசம்பர், 2015

பரிபாடல் – அரிய செய்தி - 43

பரிபாடல் – அரிய செய்தி - 43
பார்ப்பார் – அந்தணர் – ஐயர்
ஈப்பாய் அடுநறாக் கொண்டது இவ் யாறு எனப்
பார்ப்பார் ஒழிந்தார் படிவு
மைந்தர் மகளிர் மணவரை தூவிற்று என்று
அந்தணர் தோயலர் ஆறு
வையை தேம் மேவ வழுவழுப்பு உற்றென
ஐயர் வாய் பூசுறார் ஆறு
……………. பரிபா. திரட்டு. 2  : 57  – 62

பார்ப்பனர் – இவ்வையைப் புதுவெள்ளம் ஈக்கள் மொய்ப்பதற்குக் காரணமான சமைக்கப்பட்ட கள்ளைத் தன்னிடம் கொண்டு தூய்மை ஒழிந்தது என்று கருதி அந்நீரில் நீராடுதலைத் தவிர்த்தனர் ;  அந்தணர் – வையை நீரில் குளித்த ஆண்களும் பெண்களும் அணிந்திருந்த நறுமணப் பொருள்கள் தூவப் பெற்றுத் தூய்மை இழந்தது என்று நீராடாது சென்றனர்; ஐயர் – வையை நீரில் தேன் கலக்கப் பெற்று வழுவழுப்பு உடையதாயிற்று என்று கருதி நீரினாலே வாய் பூசுதலையும் செய்யாது ஒழிந்தனர். ( ஆற்று நீரை மாசு படுத்தல் அறமன்று என்பதறிக.) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக