ஞாயிறு, 27 டிசம்பர், 2015

பரிபாடல் – அரிய செய்தி - 41

பரிபாடல் – அரிய செய்தி - 41
குடியும் கூத்தும்
அரி உண்ட கண்ணாரொடு ஆடவர் கூடிப்
புரியுண்ட பாடலொடு ஆடலும் தோன்ற
சூடு நறவொடு காமம் முகிழ் விரிய
சூடா நறவொடு காமம் விரும்ப
                        ……………. பரிபா. திரட்டு. 1 : 53  – 56
பூமுடி நாகர் கோயிலில் – செவ்வரியும் கருவரியும் படர்ந்த மை தீட்டப்பட்ட கண்களை உடைய விறலியரும் கூத்தரும் கூடி – காண்பார் அனைவராலும் விரும்பப்படும் பாட்டினைப் பாடி – ஆடலையும் செய்தனர் – சூடுதற்குரிய நறவ மொட்டுடன் அதனைச் சூடிய மைந்தர் மகளிரின் காமப் பண்பும் அரும்பி மலர்ந்து நின்றது – அத்தகைய ஆடவரும் மகளிரும்  கள்ளோடு காம இன்பத்தையும் விரும்பினர். ( கள் காம இன்பத்தை மிகுவித்தலின் கள்ளொடு காமம் விரும்ப என்றார். சூடு நறவு -  சூடும் நறவ மொட்டு ; சூடா நறவு – கள் . நறவ மொட்டு அலரும் போதே  மைந்தர் – மகளிர் உள்ளத்தே காமம் முகிழ்த்தது.) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக