வியாழன், 17 டிசம்பர், 2015

பரிபாடல் – அரிய செய்தி - 31

பரிபாடல் – அரிய செய்தி - 31
செவ்வேள்  பூசை
புரியுறு நரம்பும் இயலும் புணர்ந்து
சுருதியும் பூவும் சுடரும் கூடி
எரி உருகும் அகிலோடு ஆரமும் கமழும்
குன்றம்பூதனார். பரிபா.18 : 51 – 53
நினது பூசைக்கண் முறுக்குதல் உற்ற யாழ் நரம்பினது இசையும் – நல்லிசைப் புலவர்கள் இயற்பாடல்களும் பொருந்தி – வேத ஒலியும் உபசாரமாகிய மலர்களும் விளக்குகளும் கூடி – தீயில் இடப்பட்ட உருகும் அகில் புகையும் சந்தனப் புகையும் கமழ்ந்து நிற்கும்.
வேதம் பூ சுடர் முதலியன  பூசையில் இறைவனுக்குச் செய்யப்படும்  (உபசாரங்கள்) பூசை முறைகள் – இவை பதினாறு வகைப்படும் – அவையாவன : ஆவாகநம் . தாபநம். சந்நிதானம். சந்நிரோதனம். அவகுன்டணம். தேநுமுத்திரை. பாத்தியம்.ஆசமநீயம். அருக்கியம். புட்பதாநம். தூபம். தீபம். நைவேத்தியம். பாநீயம். செபசமர்ப்பநை. ஆராத்திகை என்பனவாம். இவை சைவ சமயிகள் கூறும் உபசாரம். இவ்வுபசாரம் சமயங்கள் தோறும் வேறுபடுதலும் உண்டு. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக