வெள்ளி, 18 டிசம்பர், 2015

பரிபாடல் – அரிய செய்தி - 32

பரிபாடல் – அரிய செய்தி - 32
முருகன் – வள்ளி – தேவசேனை
தண் பரங்குன்றத்து இயல் அணி நின் மருங்கு
சாறு கொள் துறக்கத்து அவளொடு
மாறு கொள்வது போலும் மயிற்கொடி வதுவை
நப்பண்ணனார். பரிபா. 19 : 5  - 7
 தண்ணிய திருப்பரங்குன்றத்திலே நீ – ஆடும் அழகிய மயில் போன்ற வள்ளியை மணம் புரிந்தனை – இவ்வருட் செயல்  வானவர் உலகின்கண்ணே நின் பக்கத்தே அமர்ந்து விழாக்கொண்ட வானவர் மகளாகிய தேவசேனையின் திருமணத்தோடு மாறுபட்ட செயல் போலும்.
( விண்ணுலகப் பெண்ணான தேவசேனையை மணந்து அவர்க்கு அருளியது போல் – மண்ணுலகத்தார்க்கும் அருள் செய்ய வேண்டி வள்ளியை மணந்தான். விண்ணுலகத்தோடு ஒத்த மதிப்புடையதாய் மண்ணுலகத்தையும் செய்த இவ்வருட் செயலால் மானுடரும் தேவர்க்கு ஒப்பான சிறப்பெய்தினர் என்பதாம். (மேலும் அறிய : சிலம்பு – குன்றக்குரவைப் பகுதியைக் காண்க.)

1 கருத்து:

  1. பரிபாடல் பற்றிய கட்டுரைகள் நன்று.மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

    பதிலளிநீக்கு