சனி, 12 டிசம்பர், 2015

பரிபாடல் – அரிய செய்தி - 25

பரிபாடல் – அரிய செய்தி - 25
வீர மங்கை
அமிர்து அன நோக்கத்து அணங்கு ஒருத்தி பார்ப்ப
 கமழ் கோதைப் புடைத்து தன் மார்பில்
இழையினைக் கையாத்து இறுகிறுக்கி வாங்கி
பிழையினை என்ன பிழை ஒன்றும் காணான்
தொழுது பிழை கேட்கும் தூயவனைக் காண்மின்
 நல்வழுதியார். பரிபா. 12 : 57 – 61
அமிழ்தத்தைப் போன்ற இனிமை நிறைந்த பார்வையாலே யாரோ ஒருத்தி – தன் கணவனைக் கூர்ந்து பார்த்தாள் என்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாத தலைவி ஒருத்தி  -  தனது மார்பில் கிடந்த மணம் வீசும் மாலையை எடுத்து – அம்மாலையையே கோலாக் கொண்டு தன் கணவனை அடித்தாள் – தன் மார்பில் கிடந்த அழகிய  அணிகலனாகிய வடத்தைக் கழற்றி அவனது முன் கைகளைச் சேர்த்துக் கட்டி இறுக்கிப் பிடித்துக் கொண்டு – ஏடா ! நீ குற்றம் உடையவன் என்று கூறினாள்.

அவனோ அவளை வணங்கி – நான் செய்த குற்றம் யாது ? என்று கேட்டான். இக்காட்சியைக் கண்ட பலரும் குற்றமற்ற தூய்மை உடையானைக் காணுங்கள் என்று கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக