வியாழன், 4 அக்டோபர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1010


திருக்குறள் -சிறப்புரை :1010
சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனையது உடைத்து. ---- ௧0௧0
பிறர்க்குக் கொடுத்து மகிழ்தலால் சிறப்பினை உடைய செல்வர் இறுதியில் அடையும் வறுமையானது , உலகையெல்லாம் வளங்கொழிக்கச் செய்யும் மேகம் மழைபொழியாமல் வறுமையுற்றதைப் போன்றதாம்.
”பொன்னிறச் செந்நெல் தொதியொடு பீள்வாட
மின்னொளிர் வானம் கடல் உள்ளும் கான்று உகுக்கும்
வெண்மை உடையார் விழுச்செல்வம் எய்தியக்கால்
வண்மையும் அன்ன தகைத்து.” ----நாலடியார்.
பொன்னிறம் உடைய நல்ல நெல்மணிகள் பொதிந்திருக்கும் பயிர்களின் கருவானது வாடிக்கொண்டிருக்க, மின்னி ஒளிர்கின்ற வானம் விளைவயலில் பெய்யாமல் கடலில் பொழிந்து செல்வதைப்  போன்றதே ,அறிவில்லாதவர்கள் பெற்ற பெருஞ்செல்வமும் அவர்தம் கொடையும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக