வெள்ளி, 26 அக்டோபர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1031


திருக்குறள் -சிறப்புரை :1031
104. உழவு

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.---- ௧0௩௧

குடிப்பெருமைக்கு உரிய, உயர்ந்த தொழிலாக உழவுத்தொழிலைக் குறிக்கின்றார் திருவள்ளுவர்.

ஊரெல்லாம் சுற்றினும் உயர் தொழிலெனப் பலவற்றைப் போற்றினும் இவ்வுலகம் ஏர்த்தொழில் பின்னேதான் சுழல்கிறது. அதனால், உழைப்பின் வருத்தம் மிகுதி என்றாலும் உயிர்களுக்கு உணவளிக்கும் உழவே உலகின் தலைசிறந்த தொழிலாகும்.

“ இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும்
உழவிடை விளைப்போர்……” ------சிலப்பதிகாரம்.

இரந்து வாழ்வோர் சுற்றமும்  இல்லார்க்கும் இயலார்க்கும் பொருள் கொடுத்துப் பாதுகாக்கும் கொற்றமும் உழவர் நிகழ்த்தும் உழவுத் தொழில் வழியே சிறப்படையும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக