புதன், 31 அக்டோபர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1036


திருக்குறள் -சிறப்புரை :1036

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேமென் பார்க்கும் நிலை.--- ௧0௩௬

உழவர்கள் கைஓய்ந்து உழுதொழிலைச் செய்யாமல் போவார்களானால் உயிர்வாழ்க்கைக்கு உணவின்றி ஒழிய, ’உண்ணாநிலை நின்றோம்’ என்று கூறும் துறவோரும் அவ்வறநிலையில் நிற்றல் இல்லையாகும்.

“ மண்முழா மறப்ப பண்யாழ் மறப்ப
இருங்கண் குழிசி கவிழ்ந்து இழுது மறப்ப
கரும்புஆர் தேறல் சுற்றம் மறப்ப
உழவர் ஓதை மறப்ப விழவும்
அகலுள் ஆங்கண் சீறூர் மறப்ப
உவவுத் தலைவந்த பெருநாள் அமையத்து
இருசுடர் தம்முள் நோக்கி…..” ---புறநானூறு.

முரசின் கண்ணமைந்த பகுதியில் மார்ச்சனை இடுதல் மறந்து ; யாழ் 
இசையெழுப்புதலினின்று மறந்து; பெரிய இடமுடைய பானையும் பாலின்மையல் கவிழ்ந்து நெய் கடையும் ஓசையை மறந்து ; தம்முடைய உறவினர்கள் மது உண்ணுதலை மறக்க ; உழவர் உழவுத்தொழில் செய்யாது நீங்க ;  அகன்ற தெருவுடைய சிற்றூர்கள் விழாக்களை மறந்து, தன் நாடு இவ்வாறு ஆகுமாறு மன்னன் வடக்கிருந்தான்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக