திங்கள், 8 அக்டோபர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1014


திருக்குறள் -சிறப்புரை :1014
அணியன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
பிணியன்றோ பீடு நடை. ---- ௧0௧௪
சான்றோர்க்கு நாணுடைமை எனும் நற்குணமே அணியாகும் அவ்வணி இல்லையேல், பெருமிதம் மிக்க நடை அவர்க்கு நோயாகும்.
“ நச்சியார்க்கு ஈயாமை நாணன்று நாண் ஆளும்
 அச்சத்தான் நாணுதல் நாண் அன்றாம் – எச்சத்தின்
மெல்லியராகித் தம் மேலாயார் செய்தது
சொல்லாது இருப்பது நாண். –நாலடியார்.
தன்னை விரும்பி வந்தவர்களுக்கு ஒன்றும் கொடாமல் இருப்பது வெட்கமன்று ; நாளும் அசத்தால் முடங்கி இருத்தல் வெட்கமன்று ; தன்னினும் குறைபாடுடைய, அற்பர் ஆராயாது செய்த சிறிய இழிவையும் பிறர்க்குச் சொல்லாமல் இருப்பதே நாணுடைமை ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக