வியாழன், 18 அக்டோபர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1024


திருக்குறள் -சிறப்புரை :1024
சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்
தாழாது உஞற்று பவர்க்கு.----- ௧0௨௪
ஒருவன் தான் பிறந்த குடியின் பெருமையைத்  தாழ்வுறாது மேம்படுத்த, விரைந்து செய்ய நினைத்த செயல்,  தடைகள் ஏதும் சூழாமல் தானே நிறைவேறும்.

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்பதாம்.

“ஒருபுடை பாம்பு கொளினும் ஒருபுடை
அங்கண் மாஞாலம் விளக்குறூஉம் – திங்கள் போல்
செல்லாமை செவ்வனேர் நிற்பினும் ஒப்புரவிற்கு
ஒல்கார் குடிப் பிறந்தார். “ ----நாலடியார்.

ஒரு பக்கத்தைப் பாம்பு பற்றினாலும் ஒருபக்கத்தால் அழகிய இடமகன்ற பெரிய பூமியை ஒளி விளங்கச் செய்யும் நிலவினைப்போலத் தாம் செய்யக் கருதிய செயல்கள் ஈடேறாது போனாலும் நற்குடியிற் பிறந்தார் பிறருக்கு உதவி செய்வதிலிருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டார்கள்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக