திங்கள், 15 அக்டோபர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1021


திருக்குறள் -சிறப்புரை :1021
103. குடிசெயல் வகை
கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுடையது இல்.----- ௧0௨௧

ஒருவன் பிறந்த குடியின் பெருமை சிறந்து விளங்க, தான் எண்ணிய செயலை முடிக்காமல் ஒருபோதும் சோம்பி இருக்கமாட்டேன் என்னும் உறுதியில் நிற்கும் பெருமையைவிட வேறு சிறந்த பெருமை இல்லை.
பிறப்பின் பெருமை உயர்ந்த குடிப்பிறப்பில் உள்ளது.

“ மன்பதை காக்கும் நீள்குடிச் சிறந்த
 தென்புலம் காவலின் ஒரீஇ பிறர்
வன்புலம் காவலின் மாறியான் பிறக்கே.” –புறநானூறு.

பல உயிர்களையும் காக்கும் தொன்மையான குலங்களில் சிறந்த பாண்டியக் குலத்தில் பிறந்து, பாண்டிய நாட்டைக் காக்கும் பெருமையிலிருந்து நீங்கிப் பிறருடைய வன்புலங்களைக் காக்கும் குடியினனாகப் பிறப்பு அடைந்து சிறுமை உறுவேனாகுக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக