வியாழன், 12 ஆகஸ்ட், 2021

தன்னேரிலாத தமிழ் –317.

 

தன்னேரிலாத தமிழ் –317.

 

உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்

கள்ளத்தால் கள்வேம் எனல். –குறள்.281.

 

திருடாதே பாப்பா திருடாதே

வறுமை நிலைக்குப் பயந்துவிடாதே

திறமை இருக்கு மறந்துவிடாதே (திரு)

 

சிந்தித்துப் பார்த்துச் செய்கையை மாத்துதவறு

சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ

தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தாஅது

திரும்பவும் வராமே பாத்துக்கோ (திரு)

 

திட்டம் போட்டுத் திருடற கூட்டம்

 திருடிக்கொண்டே இருக்குதுஅதைச்

சட்டம் போட்டுத் தடுக்கிற கூட்டம்

தடுத்துக் கொண்டே இருக்குது !

திருடராய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால்

திருட்டை ஒழிக்க முடியாது (திரு)

 

கொடுக்கிற காலம் நெருங்குவதால்இனி

எடுக்கிற அவசியம் இருக்காது

இருக்கிறதெல்லாம் பொதுவாய் போனால்

பதுக்குற வேலையும் இருக்காது

ஒதுக்குற வேலையும் இருக்காது

 

உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா

கெடுக்கிற நோக்கம் வளராது

மனம் மேலும் கீழும் புரளாது  (திரு).

--கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், படம்: திருடாதே. 1961.

1 கருத்து: