புதன், 11 ஆகஸ்ட், 2021

தன்னேரிலாத தமிழ் –316.

 

தன்னேரிலாத தமிழ் –316.

அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்

பிறவினை எல்லாம் தரும். –குறள், 321.

 

இரை போடும் மனிதருக்கே

இரையாகும் வெள்ளாடே

இதுதான் உலகம்

வீண் அனுதாபம் கண்டு நீ

ஒரு நாளும் நம்பிவிடாதே !

 

டேயண்ணா….டேயண்ணாடேயண்ணா

ட்ரியோ டேயண்ணாட்ரியோ டேயண்ணா

 

முறியோடு உழைத்து  உண்ண

முடியாத சோம்பேறி

நரிபோல  திரிவார் புவிமேலேநல்ல

வழியோடு போகின்ற

வாய் பேசா உயிர்களை

வதச்சு தின்பார் வெறியாலே

 

காலொடிந்த ஆட்டுக்காக

கண்ணீர்விட்ட புத்தரும்

கடல்போல உள்ளம் கொண்ட

காந்தி ஏசுநாதரும்

 கழுத்தறுக்கும் கொடுமை கண்டு

திருந்த வழி சொன்னதும் உண்டு

காதில் மட்டும் கேட்டு

அதை ரசிச்சாங்கஆனா

 கறிக்கடையின் கணக்கைப் பெருக்கி வந்தாங்க !

 --கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், படம் : பதி பக்தி, 1958.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக