புதன், 18 ஆகஸ்ட், 2021

தன்னேரிலாத தமிழ் –321.

 

தன்னேரிலாத தமிழ் –321.

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

எழுமையும் ஏமாப்பு உடைத்து. –குறள். 398.

 

தமிழ் எங்கள் உயிரானதுகாலச்

சுழலாலும் கனலாலும்

அழியாமல் நிலையான (தமிழ்)

 

படிப்போர்க்குப் பால் போன்றதுதன்னைப்

பகைப்போர்க்கு வேல் போன்றது

தாயகத்தின் தன்மானக்

கலைத் தேரில் சதிராடும் (தமிழ்)

 

செந்தமிழும் பெண்குரலும் ஒன்றாகட்டும்தேவ

மங்கையரும் இங்கு வந்து நின்றாடட்டும்

தண்டையிட்டு வந்த அடி செண்டாகட்டும்நாதம்

தந்திதொட்ட வீணையென உண்டாகட்டும் (தமிழ்)

 

சிந்துகின்ற புன்முறுவல் முத்தாகட்டும்தேன்

பொங்குகின்ற கன்னம் பூங்கொத்தாகட்டும்

அந்தி வெயில்பட்டு உடல் பொன்னாகட்டும்கண்டு

ஆடவர் உள்ளம் சல்லடைக் கண்ணாகட்டும். (தமிழ்)

 ---கவிஞர் மாயவநாதன், படம் : பூம்புகார், 1964.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக