புதன், 25 ஆகஸ்ட், 2021

தன்னேரிலாத தமிழ் –327.

 

தன்னேரிலாத தமிழ் –327.

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்

தம்தம் வினையான் வரும். – குறள். 63.

 

இந்தப் பச்சைக்கிளிக்கொரு  செவ்வந்திப் பூவில்

தொட்டிலைக் கட்டி வைத்தேன்அதில்

பட்டுத் துகிலுடன் அன்னச் சிறகினை

மெல்லென இட்டு வைத்தேன்

நான் ஆராரோ என்று தாலாட்ட

இன்னும் யார் யாரோ வந்து பாராட்ட (பச்சை)

 

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான்

மண்ணில் பிறக்கையிலேபின்

நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும்

அன்னை வளர்ப்பதிலே

 

தூக்க மருந்தினைப்போன்றவைகள் பெற்றவர்

போற்றும் புகழுரைகள்நோய்

தீர்க்கும் மருந்தினைப் போன்றவைகள்கற்றவர்

கூறும் அறிவுரைகள்

ஆறுகரையில் அடங்கி நடந்திடில்

காடு வளம் பெறலாம்தினம்

நல்ல நெறிகண்டு பிள்ளை வளர்ந்திடில்

நாடு நலம் பெறலாம்

 

பாதை தவறிய கால்கள் விரும்பிய

ஊர் சென்று சேர்வதில்லைநல்ல

பண்பு தவறிய பிள்ளைகள் பெற்றவர்

பேர் சொல்லி வாழ்வதில்லை (பச்சை)

    ----கவிஞர் புலமைப்பித்தன்,  படம் : நீதிக்குத் தலைவணங்கு, ..

 

 

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக