வியாழன், 26 ஆகஸ்ட், 2021

தன்னேரிலாத தமிழ் –328.

 

தன்னேரிலாத தமிழ் –328.

பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்துஅலைக்கும்

கொல்குறும்பும் இல்லது நாடு. –குறள், 735.

 

எங்க நாடு இது எங்க நாடு

எங்கும் புகழ் தங்கும் நாடுவளம்

பொங்கும் நாடுவந்த

எல்லார்க்கும் எடங்கொடுத்து

ஏமாந்த நாடு  (எங்கநாடு)

 

தங்கக் குடிசை இல்லாமெ

தரித்திர மானாலும் தலைவிதின்னு

நம்பிக்கிட்டுசாமியெனக்

கும்பிடும் நாடு (எங்க நாடு)

 

சங்கம் வச்சு மொழி வளர்த்த

தமிழ் நாடு….. இப்போ

தாய் மொழியைக் கதம்பம் பண்ணும்

சண்டாள நாடு

சொந்த நாட்டு மனுசங்களை தூக்கிப் பேசாது

சொரண்ட  வந்த ஆளுக்கெல்லாம்

தொழுது மாலை போடும் நாடு

 

உலகுக் கெல்லாம் தருமம் சொல்லி

உயர்ந்த நன்னாடுஇப்போ

உயர்வு தாழ்வு பேசிப்பேசி

ஒத்துமையில்லா நாடுஇது

எங்க நாடுஎங்கும்

புகழ் தங்கும் நாடு …..”

   ----கவிஞர் டி.கே. சண்முகம், படம் : ஓர் இரவு, ..

 

25/8

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக