திங்கள், 16 ஆகஸ்ட், 2021

தன்னேரிலாத தமிழ் –320.

 

தன்னேரிலாத தமிழ் –320.

நாளென ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்

வாளது உணர்வார்ப் பெறின். –குறள். 334.

 

இறந்தவனைச் சுமந்தவனும் இறந்திட்டான் அதை

இருப்பவனும் எண்ணிப்பார்க்க மறந்திட்டான் (இறந்த)

 

பறந்து பறந்து பணம் தேடி

பாவக்குளத்தில் நீராடி

பிறந்துவந்த நாள் முதலாய்

பேராசையுடன் உறவாடி (இறந்த)

 

தாயாரின் வேதனையில் பிறக்கிறான்மனுசன்

தன்னாலே துடிதுடிச்சி இறக்கிறான்இடையில்

ஓயாத கவலையிலே மிததக்கிறான்ஒருநாள்

உடலை மட்டும் போட்டு எங்கோ பறக்கிறான்அப்படி (இறந்த)

 

இளமையிலே சில நாள் முதுமையிலே சில நாள்

இன்பத்திலே சில நாள் துன்பத்திலே சில நாள்

அன்னையும் மனைவியும் அருமைப் பிள்ளையும்

கண்ணீர் சிந்திடவே கடைசி வழி ஒரு நாள்அப்படி  (இறந்த)

  --கவிஞர் ஆலங்குடி சோமு, படம் : இரவும் பகலும், 1965.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக