செவ்வாய், 10 ஆகஸ்ட், 2021

தன்னேரிலாத தமிழ் –315.

 

தன்னேரிலாத தமிழ் –315.

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்

கெடுநீரார் காமக் கலன். –குறள்.605.

 

 தூங்காதே தம்பி தூங்காதேநீயும்

சோம்பேறி என்ற பெயர் வாங்காதே ! (தூங்காதே)

 

நீ தாங்கிய உடையும் ஆயுதமும் பல

சரித்திரக் கதை சொல்லும் சிறைக்கதவும்

சக்தியிருந்தால் உன்னைக் கண்டு சிரிக்கும்

சத்திரந்தான் உனக்கு இடம் கொடுக்கும் (தூங்காதே)

 

நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள்

நாட்டைக் கெடுத்ததுடன் தானுங்கெட்டார் சிலர்

அல்லும் பகலும் தெருக்கல்லா யிருந்துவிட்டு

அதிர்ஷ்டமில்லை என்று அலட்டிக் கொண்டார்

விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்உன்போல்

குறட்டை விட்டோரெல்லாம் கோட்டைவிட்டார் (தூங்காதே )

 

போர்ப் படைதனில் தூங்கியவன் வெற்றியிழந்தான்உயர்

பள்ளியில் தூங்கியவன் கல்வியிழந்தான்

கடைதனில் தூங்கியவன் முதல் இழந்தான்கொண்ட

கடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான்இன்னும்

பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால் பல

பொன்னான வேலையெல்லாம்  தூங்குதப்பா ! (தூங்காதே)

 ----கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், படம் : நாடோடி மன்னன், 1958.

1 கருத்து: