சனி, 14 ஆகஸ்ட், 2021

தன்னேரிலாத தமிழ் –318.

 

தன்னேரிலாத தமிழ் –318.

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்

சொற்கேட்டல் இன்பம் செவிக்கு. – குறள், 65.

 

சின்னச் சின்ன நடை நடந்து

செம்பவள வாய் திறந்து

அம்மா, என்று நீ அழைத்தால்

அமுதகானம் பொழியுதடா !

 

விண்ணிலாடும் வெண்ணிலவே

வீட்டிலாடும் மணிவிளக்கே

உன்னில் உயர்ந்தவர் உலகில் யாரோ?

கண்ணிலாடும் காவியமே ! (சின்ன)

 

ஆடிவரும் தென்றல் என்பார்

பாடிவரும் அருவி என்பார்

தேடிவரும் செல்வம் உன்போல்

தெய்வம் வேறு இல்லையடா  (சின்ன)

 

கொஞ்சும் மழலைக் கேட்கையிலே

குழலும் யாழும் பொய்யன்றோ

மேலும் தமிழே உன்னையன்றி

வேறு சொந்தம் இல்லையடா !  (சின்ன)

 ---கவிஞர் பி.கே. முத்துச்சாமி, படம்: காவேரியின் கணவன், 1959.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக