திங்கள், 30 ஆகஸ்ட், 2021

தன்னேரிலாத தமிழ் –332.

 

தன்னேரிலாத தமிழ் –332.

இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்

குலனுடையான் கண்ணே உள. –குறள்.223


மன்னவர் பொருளைக் கைகொண்டு நீட்டுவார்

மற்றவர் பணிந்து கொள்வார்

மாமன்னன் கர்ணனோ தன் கரம் நீட்டுவான்

மற்றவர் எடுத்துக் கொள்வார்

வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல்

வைத்தவன் கர்ணவீரன்

வறுமைக்கு வறுமையை வைத்ததோர் மாமன்னன்

வாழ்கவே வாழ்க! வாழ்க..!

 

என்ன கொடுப்பான் எவை கொடுப்பான்

என்றிவர்கள் எண்ணும் முன்னே

பொன்னும் கொடுப்பான் பொருள் கொடுப்பான்

போதாது போதாது என்றால்

இன்னும் கொடுப்பான் இவையும்

குறையென்றால் எங்கள் கர்ணன்

தன்னைக் கொடுப்பான் தன்னுயிரும்

தான் கொடுப்பான் தயாநிதியே!

 --கவிஞர் கண்ணதாசன்,படம்: கர்ணன்,1964.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக